காற்று மாசுபாடு : ஒரு மாதமாக இருமலால் அவதிப்படும் இந்தோனேசிய அதிபர்
காற்று மாசுபாடு காரணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு இருமல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னணியில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சமீபத்தில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது.
காற்று மாசுவை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தோனேசிய அதிபர் விடோடோ, சுமார் ஒரு மாதமாக இருமலால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனைகளை நடத்தினர்.
அவரது வீடு அமைந்துள்ள ஜகார்த்தாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுதான் காரணம் என சந்தேகிக்கின்றனர்.
ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறுவதற்கு முன்பே, தலைநகர் மிகவும் மாசுபட்ட காற்றில் இருந்தது.
நகருக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், பயோ கேஸ் மற்றும் நிலக்கரி எரிப்பு போன்றவை இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கூட உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி தனது செயலின் விளைவுகளையே அனுபவிக்க வேண்டியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகின்றனர்.