ரஷ்யாவில் பரிதாபம்! பெட்ரோல் பங்கில் வெடி விபத்து- 35 பேர் பலி!
#India
#Death
#Accident
#world_news
#Russia
#2023
#fire
#Tamilnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

தாகெஸ்தான் மாகாணம் ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான மகச்சலாவில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ, பெட்ரோல் டேங்க் வரை வேகமாக பரவியது.
இதனால் பெட்ரோல் டேங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 3 குழந்தைகள் உட்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 115 பேர் பலத்த காயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்த அனைவரும் காப்பாற்றப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



