கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்தை இரு மடங்காக்க திட்டமிடும் ருமேனியா!
#Russia
#Ukraine
#War
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைனில் இருந்து கருங்கடல் துறைமுகம் வழியாக தானிய போக்குவரத்தை இரு மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ருமேனியா அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மாதங்களில் 4 மில்லியன் டன் தானியங்களை கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ருமேனிய போக்குவரத்து அமைச்சர் Sorin Grindeanu தெரிவித்துள்ளார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், தானியங்களை கொண்டுச் செல்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ருமேனிய அதிகாரிகள் தற்போது அதிக ஊழியர்களை பணிக்கு நியமித்துள்ளதுடன், போக்குவரத்து திறனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



