இரக்கமற்ற வணிகமாக மாறி வரும் ஆட்கடத்தல் நடவடிக்கை!
#SriLanka
#Kamal Gunaratna
#Lanka4
Thamilini
2 years ago
ஆள் கடத்தல் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(14.08) இடம்பெற்ற மனித கடத்தல் தொடர்பில் பிராந்திய செயலாளர்களுக்கு அறிவிக்கும் அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 2021-2025 காலப்பகுதியில் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய மூலோபாய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மனித கடத்தலுக்கு முழுமையான பதிலடி கொடுப்பதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.