இலங்கைக்கு வரவுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பல்!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 (Shi Yan 6) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள குறித்த சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் நவம்பர் மாதம் வரை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.