தண்ணீர் இல்லாததால் வயலுக்கு தீ வைத்த விவசாயி
#SriLanka
#fire
#Paddy
Prathees
2 years ago
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நெற்செய்கைக்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததன் காரணமாக அக்குனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் வயல் காணி உரிமையாளர் ஒருவர் காய்ந்த பயிருக்கு தீ வைத்துள்ளார்.
சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் நெற்செய்கைக்கு நீர் கோரப்பட்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் எடுக்கப்படாத தீர்மானங்களினால் நெற்செய்கைக்கு நீர் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தண்ணீர் கிடைத்தாலும் பயனில்லை என்று கூறி வயலுக்கு தீ வைக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தந்த வயலில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.