திடீரென சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்த போர்க் கப்பல்!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
சீனாவின் போர்க் கப்பல் ஒன்று நேற்று கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பல் 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.