விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியை சந்தித்த சிறிதரன்!
#SriLanka
#sritharan
Mayoorikka
2 years ago
கடந்த 13 வருடங்களாக புதிய மகசின் சிறைச்சாலையில் அரசியற் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையான செல்லையா நவரட்ணம் ஐயாவை, மருதநகர், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கண்டாவளைப் பிரதேச அமைப்பாளர் பிரதீபராஜ், கிளிநொச்சி நகர வட்டார அமைப்பாளர் விசுவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.