ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறுநாட்களில் இலங்கைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் திகதிகளின் வருகையுடன் இந்த ஆண்டு இதுவரை 800, 000 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான காலப்பகுதியில் 798, 216 பேர் வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில், இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது, இது மொத்த வருகையில் 15 சதவீதமாகும்.
இதனையடுத்து, ஐக்கிய இராச்சியம் 4,254 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, மொத்த வருகையில் 14 சதவீதத்தைக் இது கொண்டுள்ளது.