13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது!
#SriLanka
#Lanka4
#13th Amendment Act
Thamilini
2 years ago
இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில், இந்திய மத்திய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர், டிஆர். பாலு தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் காரணமாக மோடி அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.