மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு!
#SriLanka
#Import
Mayoorikka
2 years ago
தற்போது இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மேலும் 300 வகையான பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை செப்டம்பர் மாதம் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.
பொருளாதாரம் மீண்டு வருவதால், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
1465 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்படுவதுடன், பிற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளும் எதிர்காலத்தில் நீக்கப்பட உள்ளன.