வெயாங்கொட பகுதியில் பதிவாகிய மனிதாபிமானமற்ற பிள்ளைகளின் ஈனச் செயல்!
#SriLanka
#Police
#Lanka4
Thamilini
2 years ago
வெயாங்கொட பகுதியில் தன்னை வளர்த்த தாயை மகன் ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது என பொலிஸாரிடம் தெரிவிக்கும் காணொலி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
75 வயது நிரம்பிய குறித்த தாயாரை பிள்ளைகள் கவனிக்க முடியாது எனக் கூறி கைவிடும் காட்சி பதிவாகியுள்ளது.
காணொலியில் தன்னால் தயை பராமரிக்க முடியாது என மகன் கூறுகிறார். அதேபோல் அவருடைய மகளும் அவரை கவனித்துக்கொள்ள முடியாது என மறுக்கிறார்.
இறுதியில் குறித்த தாயை மருமகன் வந்து அழைத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பெற்றவர்களைக் கூட பார்த்துக்கொள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கும் பிள்ளைகளின் மனிதாபிமானமற்ற செயலை இந்த காணொலி அம்பலப்படுத்தியுள்ளது.