சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளப்பெருக்கு. 20 பேர் உயிரிழப்பு!

#China #Death #world_news #Lanka4 #Flood #வெள்ளம் #சீனா #மரணம் #லங்கா4
சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளப்பெருக்கு. 20 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்திற்கும் அதிகமாக மழை பெய்து வரும் காரணத்தால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியதாவது: பெய்ஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் முழ்கின.

 சாலைகளிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் 20 போ் பலியாகினா்; 27 போ் மாயமாகினா் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பெய்ஜிங் பிராந்தியத்தில் மிதமான மழையே பெய்வது வழக்கம். அங்கு இந்த அளவுக்கு மழை பெய்ததன் விளைவாகவே அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமையானது மிகவும்  அபூா்வமானதாகும் என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!