அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழுவின் அறிக்கையின்படி, இதில் 95 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்கள், கரண்டிகள் மற்றும் கத்திகளை வழங்குவதற்கு முன் வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது.
இதை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என நகர மேயர் எரிக் ஆடம்ஸ் விதித்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



