சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் அழைக்கப்பட்ட இந்த வழக்குக்காக பிரதிவாதி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இவ்வழக்கிற்கு அடிப்படையான இதேபோன்ற மற்றுமொரு வழக்கு தொடர்பிலேயே பிரதிவாதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டிதரத்ன தெரிவித்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி வழக்கை நவம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2016 பெப்ரவரி 28 ஆம் திகதி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.