மிசோரமில் திடீரென நிலநடுக்கம் 3.6ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு
#India
#Earthquake
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

இன்று அதிகாலை, மிசோரமில் உள்ள என்கோபாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 1.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.



