எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நட்டஈட்டு மதிப்பீட்டில் முன்னேற்றம்
#SriLanka
Mayoorikka
2 years ago
சட்டமா அதிபரின் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள X-Press Pearl உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளது.
கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது நட்டஈட்டு மதிப்பீட்டின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.