உக்ரைனுக்கு மேலும் 1.3 பில்லியன் பெறுமதியான உதவி தொகுப்பை அறிவித்த அமெரிக்கா!
#world_news
#War
#Lanka4
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

உக்ரைனுக்கு 1.3 பில்லியன் பெறுதியான உதவி தொகுப்பை அமெரிக்கா நேற்று (09.07) அறிவித்துள்ளது.
இந்த உதவி தொகுப்பில், வான்பாதுகாப்பு அமைப்புகள், தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற உபகரணங்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உக்ரைனின் ஆயுதப் படைகளின் நீடித்த திறனைக் கட்டியெழுப்பும் அதே வேளையில், முக்கியமான நெருங்கிய கால திறன்களைச் செய்வதன் மூலம் உக்ரைனின் அழுத்தமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி தொகுப்பு வழங்கப்பட்டவுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போரில் அதிகமான உதவிகளை வழங்கும் மேற்குலக நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது. அண்மையில் கூட கிளஸ்டர் குண்டுகளை வழங்கி சர்சைகளில் சிக்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



