காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த கைதி ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் நேற்று (19.07) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த "அன்டா" என அழைக்கப்படும் சுஜித் பிரசன்ன என்பவரே மோதலில் காயமடைந்துள்ளார். அசங்க காந்தா என்ற கைதி ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன.
மோதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.