ஐ.தே.கவின் தலைவர் பதவியை கைவிடவுள்ள ரணில்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Prathees
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலைவர் பதவியில் உள்ள பல பொறுப்புகள் காரணமாக கட்சிப் பணிகளை மேற்கொள்வதில் அதிக நேரம் செலவிட முடியாததால், இரண்டாம் நிலை தலைவர்கள் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்டர்கள் முன்னிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மையான தலைவர்கள் முன்வரக் கூடிய வகையில் சம அதிகாரங்கள் கொண்ட தலைமைத்துவ சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.