கோத்தபாய ஆட்சியில் கடத்தல்: பொய் கூறிய சுவிஸ் தூதரக ஊழியருக்கு சிறைத்தண்டனை
#SriLanka
Mayoorikka
2 years ago
2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்றுபிறப்பித்துள்ளது.
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி நிசாந்த சில்வாவின் விசா விபரங்களை கோரி தான் கனியா கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.