சூடானில் உள்ள ஒரே புதைகுழியில் 87 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன
#Death
#world_news
#2023
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
#Killed
Mani
2 years ago

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைகள் எனப்படும் பி.எஸ்.எப்-க்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மோதல் தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் சூடானின் மேற்குப் பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை கூறி உள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் தற்போது இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



