பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் டெல்லியில் பரபரப்பு
#India
#PrimeMinister
#Drone
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது. பாதுகாப்பு படையினர் காலை 5.30 மணிக்கு டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



