இளம் பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல் : பொலிஸார் எச்சரிக்கை!

#Police #Lanka4
Thamilini
2 years ago
இளம் பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல் : பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கையில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் பறிக்கும் மர்மக் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த குழுவினர் டிக்டொக் செயலி மூலம் இளம் பெண்களை குறிவைத்து, அவர்களின் கைத் தொலைப்பேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு, குறிஞ்செய்தி அனுப்பியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்துள்ள வங்கி கணக்கிலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். 

மேலும் இந்த மர்மக் குழு பற்றிய மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!