உக்ரைனின் பீட்சா உணவகம் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா - 09 பேர் பலி!
#Russia
Dhushanthini K
2 years ago

கிழக்கு உக்ரைனில் உள்ள பீட்சா உணவகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.
கிராமடோர்ஸ்கில் உள்ள உணவகம் மீது ரஷ்ய படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ஏறக்குறைய 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போதுவரையில் மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய படையினர் S-300 ஏவகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



