அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஒரே நேரத்தில் உரையாற்றுவதற்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது.
எனினும், அந்நாட்டின் சபாநாயவாதி கெவின் மெக்கார்த்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றினார்.
இதன்படி, காங்கிரஸில் உரையாற்றும் போது உக்ரைன் நெருக்கடி, உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் இந்திய உறவுகள் குறித்து இந்தியப் பிரதமர் தனது கருத்துக்களை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ஜோ பிடனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அரசு பயணத்தையொட்டி இந்த நாட்களில் அமெரிக்காவில் தங்கியுள்ளார்.
நாளை சுற்றுப்பயணம் முடிவடைந்து பின்னர் அவர் எகிப்து செல்கிறார்.