போதைப்பொருளுடன் கையும் களவுமாக பிடிபட்ட சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு
#SriLanka
#Police
#Court Order
Prathees
2 years ago
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 1227 கிலோ 270 கிராம் கஞ்சாவுடன் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டு 72 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போதே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய புதிய நகரில் உள்ள வீடொன்றை எம்பிலிப்பிட்டிய பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்ததன் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட உலர் கஞ்சா கையிருப்பு, பொலிஸாரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட நாட்டிலேயே மிகப்பெரிய உலர் கஞ்சா கையிருப்பு என பொலிஸார் தெரிவித்தனர்.