லண்டனில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தை சந்தித்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#London
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
நேற்றைய தினம் லண்டனில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விகாரமசிங்க சென்ற நிலையிலேயே பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார்.
இதன்போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டது