இலங்கையில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
#SriLanka
#Police
#Crime
Mayoorikka
2 years ago
இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் தொடர்பில் மாத்திரம் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெய நெத்சிறி குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.