இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன், அரையிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
#India
#sports
#2023
#Tamilnews
#Player
#Sports News
Mani
2 years ago

ஜகர்த்தா
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ்.பிரனாய் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆக்சல்சென் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.



