கிறீஸ் நாட்டுக்கு அருகில் படகு கவிழ்ந்து விபத்து!
#world_news
PriyaRam
2 years ago
கிறீஸ் நாட்டுக்கு அருகில் இன்று காலை சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் சுமார் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், படகிலிருந்த 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கிறீஸ் கரையோர காவல்படை தெரிவித்துள்ளது. இராணுவ விமானம், உலங்குவானூர்தி மற்றும் 6 படகுகள் ஆகியன மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.