தென்னாப்பிரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சக்திவாய்ந்த நிலநடுக்கம்
#SriLanka
#tsunami
#Tamilnews
#SouthAfrica
Prathees
2 years ago
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கே உள்ள ஆல்பர்டன் நகரின் மேற்பரப்பிலிருந்து 10 கிமீ (ஆறு மைல்) கீழே உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பெரிய அளவில் சேதமோ ஏற்படவில்லை.
2014 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஓர்க்னி தங்கச் சுரங்க நகருக்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் ஒருவர் இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.