அசைவ உணவை உட்கொள்ளும் போது ஏன் நமக்கு அதிகம் வேர்க்கிறது.

#Health #Lanka4 #ஆரோக்கியம் #உணவு #லங்கா4 #Sweat
Mugunthan Mugunthan
11 months ago
அசைவ உணவை உட்கொள்ளும் போது ஏன் நமக்கு அதிகம் வேர்க்கிறது.

வார இறுதி நாட்கள் என்றாலே எல்லோர் வீட்டிலும் அசைவ உணவுதான் அதிகமாக பரிமாறப்படும். இவ்வேளையில் இந்த அசைவ உணவைச் சாப்பிடும் போது, நீங்கள் எப்போதாவது அதிகம் வேர்ப்பதனை உணர்ந்துள்ளீர்களா?

அசைவ உணவுகள் சாப்பிடும்போது மட்டும் அளவுக்கு அதிகமாக வேர்ப்பதற்கு அறிவியல் ரீதியாக சில காரணங்கள் கூறப்படுகின்றன. 

இந்த பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படும் அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரிந்தால் இந்த பிரச்சனையை எளிதில் சமாளிக்க முடியும்.

 யாருக்கெல்லாம் உணவு அலர்ஜி இருக்கிறதோ குறிப்பாக சிலருக்கு நட்ஸ் வகைகள் சாப்பிடும் பொழுது புரத அலர்ஜி ஏற்படும்.

 இதுபோன்ற அலர்ஜி உள்ளவர்களுக்கு ஜீரண மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.

 இதுபோன்று உணவு அலர்ஜி இருப்பவர்கள் அசைவ உணவுகள் சாப்பிடும் போது அவற்றில் அதிகமாக புரதங்கள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக வேர்க்கும்.

 குறிப்பாக பால் அலர்ஜி கடல் உணவுகள் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றால் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது வியர்வை அதிகமாக இருக்கும்.

உணவு சகிப்புத்தன்மை நோய் எதிர்ப்பு மண்டலத்தோடு நேரடியாக தொடர்புடையது. உணவு சகிப்புத் தன்மை இருக்கும் பொழுது அவர்களுக்கு கட்டாயம் ஜீரண ஆற்றல் குறைபாடு இருக்கும்.

 அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ளும் பொழுது அவற்றை ஜீரணிக்க உடல் சிரமப்படும். இதன் காரணமாக அதிகமாக வியர்வை உண்டாக்கும். ​ நம்முடைய உடலில் ஜீரண மண்டலம் வேலை செய்யும் பொழுது ஜீரண செயல்பாடு நடக்கும் பொழுது உடலில் வெப்பம் உற்பத்தியாகும்.

 அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது ஜீரண செயல்பாடு வேகமாக நடக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் உடலின் வெப்பமும் அதிகரித்த அது வேர்வையாக வெளியேறும் ​.

 சாப்பிடும் போது ஒவ்வொரு உணவிற்கும் வேறு வகையான வெப்பநிலை உற்பத்தியாகும். நாம் உண்ணும் ஒவ்வொரு வகை உணவும் நம்முடைய உடலின் வெப்பநிலையை ஒவ்வொரு அளவில் வித்தியாசப்படுத்தும்.

 அந்த வகையில் அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய உடல் சூடு அதிகரிக்கும். இதன் காரணமாக அசைவ உணவுகள் சாப்பிடும்பொழுது வியர்வை அதிகமாக உண்டாகிறது.

​இதனை எப்படி தவிர்க்கலாம் என்று நீங்கள் கேட்பது சரி. சாப்பிடும்போது அதிகமாக வியர்க்காமல் இருக்க மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.

 ஒருவேளை உங்களுக்கு அசைவு உணவு பிடிக்கும் என்றால் ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடலாம்.

 அப்படி சாப்பிடும் பொழுது அதை ஜீரணிப்பதற்கு உடலுக்கு குறைந்த ஆற்றல் தேவைப்படும்.

 அதனால் உடலில் வெப்பநிலை குறைவாக உற்பத்தியாகும் வியர்வையும் குறைவாக இருக்கும். இதுவே ஒரே வேளையில் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூடு அளவுக்கு அதிகமாக உண்டாக்கி வியர்வை அதிகமாக உற்பத்தியாகும்.

எனவே நீங்களும் அளவாக அசைவ உணவை உட்கொள்வதனால் வேர்க்கும் போது ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை.