ஐபிஎல் இறுதிப்போட்டியில் கனமழை பெய்து வருவதால் நடக்கப்போவது என்ன?
#India Cricket
#Cricket
#sports
#IPL2023
#Sports News
Mani
2 years ago

ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இன்று அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது, மேலும் இறுதிப் போட்டி நடைபெற உள்ள இடத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெறும் இறுதிப் போட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
9.35 மணிக்கு முன்னதாக மழை நின்றால், ஆட்டம் தொடங்கி 20 ஓவர்களும் விளையாடப்படும். அதேவேளை, இரவு 12.06 மணிக்குள் மழை நின்றால், 5 ஓவர்கள் மட்டுமே விளையாடப்படும். ஆனால், மழை இன்று முழுவதும் பெய்தால் ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



