முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வந்த பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள்! கண்கலங்க வைத்த காட்சி
#SriLanka
#Tamil People
#Mullaitivu
#sri lanka tamil news
#Mullivaikkal
Mayoorikka
2 years ago
இறுதி யுத்ததில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்பொழுது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஊர்தி ஒன்று அனைவரின் பார்வைகளையும் திருப்பியுள்ளது. இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களை தற்பொழுது காட்சிப் படுத்திய ஊர்தி ஒன்று முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வந்துள்ளது.
காயப்பட்டவர்கள் போன்று வேடம் தரித்து மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனின் இறுதி கணங்களை கண்முன்னே கொண்டு வந்துதுள்ளனர். இந்தக் காட்சி பார்ப்பவர்களை மிகவும் கண்கலங்க வைத்துள்ளது.

