நாட்டில் தினசரி உப்பு நுகர்வு ஆபத்தான நிலையில்
#SriLanka
#Food
#Lanka4
#sri lanka tamil news
#Salt
#Health Department
Prathees
2 years ago
ஒருவர் தினமும் உட்கொள்ளும் உப்பின் அளவு 14.2 கிராம் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது பரிந்துரைக்கப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அல்லது அதற்கும் குறைவான உப்பை உட்கொள்ள பரிந்துரைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் தொடர்பான தகவல்களும் கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.