சுடலைக்குள் மணல் அகழ்வு - பருத்தித்துறை பொலிசாருக்கு இளைஞர்களால் முறைப்பாடு
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago
குடத்தனை கிழக்கு சுடலைக்குள் மணல் அகழ்வு தொடர்சியாக இடம் பெறுவதாக பருத்தித்துறை பொலிசாருக்கு இளைஞர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மணல் மண் ஏற்றிய டிப்பர் ரக வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் டிப்பர் வாகனமும் பருத்தித்துறை பொலிசாரால் நீதிமன்றில் முற்படுத்தப் படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.