சூடானில் நடந்த மோதலில் 400க்கும் மேற்பட்டோர் பலி

#Death #world_news #War #Lanka4 #Sudan
Prathees
3 years ago
சூடானில் நடந்த மோதலில் 400க்கும் மேற்பட்டோர் பலி

சூடானின் கார்ட்டூமில் நடந்து வரும் மோதல்களால் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 

 இந்த மோதல்களில் 411 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை விட அதிகமானோர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சூடான் சுகாதார அமைச்சு, மோதலின் ஆரம்பத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, போராளிகள் உட்பட மொத்தம் 528 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4