மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு உறுதிப்பாட்டை வழங்கிய இந்தியா!

#India #SriLanka #Election #Local council
Mayoorikka
2 years ago
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு உறுதிப்பாட்டை வழங்கிய இந்தியா!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்குமிடையில் நேற்று(28) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 இதன் போது புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு , இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.

 மேலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!