இந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் ’பரியேறும் பெருமாள்’
#TamilCinema
#Cinema
Mani
2 years ago
.jpg)
இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.
தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
ஹிந்தி சினிமாவில் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தான் இந்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் தான் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



