அரிசி விலையில் சலுகை வழங்க முடியாது - டட்லி சிறிசேன
#rice
#prices
#SriLanka
#Lanka4
#srilanka freedom party
#sri lanka tamil news
#srilankan politics
Prabha Praneetha
2 years ago
பொது மக்களுக்கு அரிசியின் விலையில் சலுகைகளை வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வு, அதிக வரி உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், அரிசி விலையில் சலுகைகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.