17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்
#SriLanka
#heat
#Department
#Warning
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களில் மனித உடல்ல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




