செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

#hyderabad #PrimeMinister
Mani
3 years ago
செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தெலுங்கானா சென்றுள்ளார். ஐதராபாத் வந்துள்ள பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதையடுத்து, செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4