பண மோசடி செய்து கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்ற 19 வயது இளைஞன் கைது
#SriLanka
#money
#பணம்
#மோசடி
#Arrest
#Police
#sri lanka tamil news
#Lanka4
#லங்கா4
Prasu
2 years ago
பயணிகள் பேரூந்துகளில் ஏறி பணம் பெற்று மோசடி செய்த 19 வயது இளைஞரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்றதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட அருகில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடலில் நீந்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்த விதம் அருகில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இவ்வாறு பதிவாகியிருந்தது.