தேர்தலை நடத்துவதா இல்லையா - தேர்தல் தொடர்பில் மைத்திரி கருத்து!
#SriLanka
#Election
#Maithripala Sirisena
#Lanka4
#Sri Lanka President
#லங்கா4
Prabha Praneetha
2 years ago

தேர்தல் நடக்குமா நடக்காத என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்
அவர், “தேர்தல் ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
குறித்த முடிவுகளின் படியே திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும்.“ எனத் தெரிவித்துள்ளார்.



