இந்தோனேசியாவில் இலங்கை வர்த்தகர் ஒருவர் கொலை
#Murder
#Police
#SriLanka
Prathees
2 years ago

ஓபெக்ஸ் ஹோல்டிங் உரிமையாளரான ஒனேஷ் சுபசிங்க என்ற வர்த்தகர் இந்தோனேசியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபரின் மனைவி பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் என்பதால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என உள்ளூர் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தொழிலதிபர் தனது மனைவி, மகள் மற்றும் மற்றுமொரு பிரேசில் பெண்ணுடன் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.
கொலைக்குப் பிறகு, தொழிலதிபரின் மனைவி, அவரது குழந்தை மற்றும் மற்ற பெண் பிரேசிலுக்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.



