மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் முக்கியமானது: விக்டோரியா நுலண்ட்
#SriLanka
#sri lanka tamil news
#America
Mayoorikka
2 years ago

இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும், அந்த திருத்தங்களை சர்வதேச சரத்துகளுக்கு அமைவாக வடிவமைப்பதும் அவசியம் எனவும் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.



