சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை!!
#Tourist
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
2 years ago

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



