அரநாயக்க - மாவனல்ல வீதியின் அலுபத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Accident
#Death
#Police
Prasu
2 years ago
அரநாயக்க - மாவனல்ல வீதியின் அலுபத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (09) மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்த நிலையில் திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



