தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வடக்கு கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி

Mayoorikka
2 years ago
தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வடக்கு  கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி

தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!